Thursday, 6 November 2014

துணிக எழுக!


துணிக எழுக!

விழுந்தாயா எழுந்தாயா விடைக்கிங்கு நேரமில்லை.
அழுதாயா சிரித்தாயா அதற்கிங்கு அவசியமில்லை.
விழுவதே எழுந்திடத்தான் 
கிடந்தாலும் கேட்பாரில்லை.
விழுந்ததைப் பயிற்சியாக்கு
எழுந்தது முயற்சியாக்கு
விழுவதெதற்கு எழுவததற்கே! அழுவதற்கல்ல எழுகவே!
 
அழுவதெதற்கு சிரிப்பததற்கு 
முடிக்கல்ல துணிகவே!
முடிப்பதற்கும் தொடர்வதற்கும் 
மறக்கல்ல வளர்க்கவே!
மறப்பதற்கும் நினைப்பதற்கும் துறக்கல்ல துலக்கவே!

தவறுமொன்று பழகும்நன்று திருந்துமென்று நிச்சயம்.!
எவருமிங்கு உலகம்கண்டு பிறக்கவில்லை சத்தியம்.
பதறுமொன்று சிதறுமென்று இதயம்கொண்டு துணிகவே!
எதையும்வென்றுஎ
எடுப்பேனென்று இறங்கிச்செய்யத் துணிகவே!

அவசரஉலகம் அவரவ்ர்பணிக்கு அவசியமிருக்கு உணர்கவே!
சுவராய் சும்மா 
இருந்தால் சுமையே! சொரணைமுறுக்கு முனைகவே!.
காலமெவர்க்கும் கைகாட்டியல்ல
 நாளும் அதுவும் 
வேகம் பெருக்கும். 
சூலம் கணித்தும் சுழல்வதில்லை. 
வேலை யொன்றே 
விதியென நெருக்கும்.

மனிதம்கெட்டு புனிதம்பட்டு தர்ம மிங்கே சாகுதே!
இனியும்விட்டு இளமைபட்டு கர்மமென்ன  ஆவதோ!
வினையே!விதியே! வேறேகதியோ விரைவெனப்புயலே  துணிகவே!
துணிக வெழுக தொடர்க இணைக முனைக முடிக்க வெல்க வெல்கவே!

கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment