புதிய கீதை.(1) இன்னொரு வேதம்.
உன்னையே நீயும் உனக்குள்ளே தேடென்றே
வெண்ணைத் திருடன் விளக்கிய கீதையே
கண்ணைத் திறந்தது காண்டீபன் வில்லையே
மண்ணைப் புதுப்பித்தும் மாற்றமும் கண்டதே.
விவிலியம் குரான் விளக்கும் மறைகள்,
அவசரம் கூறிடும் அற்புத நெறிகள்.
அவதார அவசியம் ஆற்றும் குறிகள்
நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள்.
கீதை விவிலியம் குர்ரான் புனிதமே!
பாதை பழக்கிய பண்பினை நனிதமே!
ஆதி முதலது அன்பினை அமைக்குமே!
வேதம் அதுதான் என்பதை சமைக்குமே!
தர்மம் உலகில் தள்ளாடும் பொழுதெலாம்,
அதர்மம் கலக்கி உள்ளாடும் பொழுதெலாம்
துர்மம் அழிக்கத் தோன்றிப் பிறக்குமாம்.
கர்மம் விளக்கப் புதியதாய் அவதாரங்கள்.
அதர்மம் அழித்த அவதாரம் கண்ணன்.
அநீதி ஒழித்த அவசியம் ஏசன்.
ஈகை இரக்கம் எனவந்த நபிகள்.
ஆகமம் தந்தும் அகிலம் அமைத்தனர்.
தாயைப் பழித்திடும் பாவம் படர்வதும்,
சேயை ருசிக்கும் அவலம் தொடர்வதும்,
கொள்ளை கொலையும் கொடிய தீவினைகள்
வெல்லவும் மீள்வர்
வல்ல வினை மீட்பர்.
பாவமோ தர்மம்! பலியிடும் சாபமோ!
கோபமோ வேதம்! கொலைபடும் நாசமோ!
இன்னோர் இறையோன்
மீட்சியும் மெய்யாமே!
பின்னொரு வேதம் புரட்சியும்!செய்யுமே!
கொ.பெ.பிச்சையா.
.jpg)

No comments:
Post a Comment