Monday, 3 February 2025

ஊளையிடுவான் கோழை.


ஊளையிடுவான் கோழை.

அன்றவன் போன தெங்கே?
இன்றவன் புலம்ப லிங்கே!
அன்றவன் ஒத் தூதினான்.
இன்றவன் வெத் தூதுகிறான்.

ஆயுதம் மறைத் திருப்பான்
ஆகும் பயன் வைத்திருப்பான். 
சாயும் வேளை ஆனபின்னே
சங்கூதும் கோழை யவன்.

ஆகாதப் பேச்சுப் பேசி
ஆண்மையைத் தொலைத்தவன்.
உழைத்தவன் வளர்ச்சியிலே
ஊளையிடுங் கோழையவன்.

அதிகாரம் கொண்டவன்.
ஆனாலும் சண்டியவன்.
விதியெனத் தூங்கி விட்டு
சதியென்பான் கோழையவன்

திரியோதனச் சதிகாரன்
வெறியாட்டம் அதிகாரன்.
கர்ணயப் பாவம் செய்வான்
கொலைகாரக் கோழையவன்.

தர்மங்கள் பேசுவான்
தர்மங் காணக் கூசுவான்.
பீஸ்மனாய் பாவங்கண்டும்
பாராமுகன் கோழையவன்.

நேர்நின்று போர்ச் செய்யான்.
போர்கண்டு ஊர் செல்வான்.
பேர்கொண்டு புகழ் வெல்லான்
கூர் மழுங்கிய கோழையவன்.

வீரெனென்று முழங்குவான்.
தீரம் கண்டு கலங்குவான்.
புறம்கூறி பேதைப்போல்
நிறம்மாறிக் கோழையவன்.

எதிர் வென்று வாழாதான்
இசைந் தெங்கும் சேராதான்.
இனங் கொன்று வாழ்பவன்
மனங் கொன்ற கோழையவன்.

தன்னின்பம் தானென்பான்.
மண்கனிமம் களவு செய்வான்.
பொய்மையிற் புகழ் சேர்ப்பான்.
மெய்மையிற் கோழையவன்.

தம்பி எனக் கூவுவான்.
தன்முதுகும் நம்பாதான்.
நம்பியாரை நம்பாதான்.
வெம்பிக் கெடும் 
கோழையவன்.

டயட் ரன் கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment