Monday, 3 February 2025

நீதி எங்கே?

நீதி எங்கே?

கொதித்துத் துடிக்குது உண்மைகள்.
குளிர்ந்து கிடைப்பது எப்போது?
மிதித்துக் கிடக்குது நன்மைகள்.
மதிக்க நடப்பது எப்போது?

கண்ணைக் கட்டிக் கொண்டாள்.
காந்தாரி போல் நீதிமகள்.
என்னதான் நடக்குது இங்கே?
பண்ணுவ தெல்லாம் பணந்  தானிங்கே!

எண்ணும் மெய் நீதி எங்கே?
சொல்லும் பொய் சாட்சி யங்கே! .
உண்மை வெல்லும் காலம் எப்போ?
நன்மை சொல்லும் நாளும் அப்போ.

மக்கள் சக்தி ஒன்று சேரும்?
மனம் விளங்கி வென்று தீரும்.
அக்காலம் தான் சாமியும் பேசும்.
எக்காளம் ஊதி நீதி வாழ்த்தும்.

“யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத்யா
அப்யுத்தாநம அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரஜாம்யஹம்
பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச சதுஸ்க்ரதாம்
தர்மசன்ஸ்தாபனாய சம்பவாமி யுகே யுகே "

எங்கெல்லாம் தர்மம் அழிகிறதோ!
அங்கெல்லாம் அதர்மம் தலை தூக்கும். 
மீண்டும்
தர்மம் காக்கவும் அதர்மம் அழிக்கவும். 
வேண்டும் போது நான் மீண்டும் பிறந்து வருவேன்.

 இது கிருஷ்ணன் சொன்னது.
பகவான் கீதை என்பது.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment