உறவின் வேர்.
உறவின் வேரு என்றாலும் தீராது.
சொந்தம் பந்தம் சேர்ந்து வாழும் பூமி இது.
எந்த ஊரு வாழ்ந்தாலும் சாமி இது.
ஆலமரம் நிழல் போல எங்கள் கூட்டம்,
வாழும் ஒரு வட்டம் எங்கள் பூந் தோட்டம்.
தனிமரம் போல் ஒற்றையாக வாழ மாட்டோம்.
புனிதம் எங்கள் உறவில் நாங்கள் கலையவும் மாடோம்.
கோவில் இல்லா ஊருங்கூட இருந்தும் இருக்கும்.
குல சாமி இல்லா சொந்தம் மறந்தும் இருக்கும்.
வாழ்வில் ஒரு வரம் பெற்றால் என்ன இருக்கும்!
சாவில் அதை வந்து பாரு புரிந்தும் இருக்கும்.
உலகுக் கெல்லாம் சோறு போடும் உழவுத் தொழிலால்,
வழங்கி வாழும் வள்ளல் நாங்கள் உள்ளம் எழிலால்.
மரபு வழி ஒழுக்கம் அதில் மாறவும் இல்லை.
உறவின் வேரு ஊரு இதை
மீறவும் இல்லை.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment